Wednesday 8th of May 2024 04:20:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
உலகெங்கும் 80 மில்லியன் குழந்தைகள்  தடுப்பூசிகளைப் பெற முடியாத ஆபத்து!

உலகெங்கும் 80 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசிகளைப் பெற முடியாத ஆபத்து!


கொரோனா பெருந்தொற்று காரணமாக, உலகில் 80 மில்லியன் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா சிறுவா் பாதுகாப்பு நிதியம் ஆகியன இணைந்து இன்று எச்சரித்துள்ளன.

கொரோனாவால் உலக நாடுகளில் சுகாதார அமைப்புக்கள் சீா்குலைந்துள்ளன. இதனால் ஏழை நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் அம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது பாதிக்கப்படும் எனவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

குறைந்தது 68 நாடுகளில் இந்த பாதிப்பு இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பூசிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் உலகளாவிய முயற்சிகளை முன்னெடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. சிறுவா் பாதுகாப்பு அமைப்பு என்பன கூட்டாக இன்று அழைப்பு விடுத்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE